துருக்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சி – 3 பேர் கைது

295 0

turkey-enodanதுருக்கியின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் துருக்கியின் முன்னாள் அதிபரின் ஆலோசகர் உட்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் துருக்கியின் தற்போதைய அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்;ப்பதற்கான சதி முயற்சியில் இராணுவத்தினர் ஈடுப்பட்டனர்.

பின்னர் பொது மக்களின் துணையுடன் குறித்த ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் குறைந்து 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் அதிபரின் ஆலோசகர் உட்பட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.