ஒன்றிணைந்து முன்நோக்கி செல்லவேண்டும் – சம்பந்தன்

319 0

140810162702_sampanthan_640x360_afpஅனைவரும் ஒன்றிணைந்து நாடு என்ற அடிப்படையில் முன்நோக்கி செல்ல வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மாத்தறை நுப்பே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

எதிர்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் நலன் கருதி செயற்படவேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் குறிப்பிட்டார்.