செப்டெம்பர் 2 இல் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

318 0

news_image_12434இலங்கைக்கு எதிர்வரும் 31 ஆம் திதகி வருகைதரும் ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இங்கு செல்லும் அவர் பல்வேறு தரப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாங்களில் உள்ள மக்களையும், உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த விடுவிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிடவுள்ளார்.
எதிர்வரும் 31 ஆம் திகதி புதன்கிழமை ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இலங்கைக்கு உத்தியோக பூர்வமான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது செப்டெம்பர் மாதம் 2 ஆம்திகதி யாழ்ப்பாணத்திற்கும் அவர் செல்லவுள்ளார். அங்கு செல்லும் அவர் இராணுவ உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வைக்குள் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வலி.வடக்குப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சுன்னாகம் பகுதியில் உள்ள கோணப்புலம் முகாமிற்குச் செல்லும் அவர் அங்குள்ளவர்களுடனும் கலந்துரையாடவுள்ளார்.
மேலும் வடமாகாண ஆளுநர் ரேஜினோட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்களையும் சந்தித்து தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடல் நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.