காமினி செனரத் பிணையில் விடுதலை

358 0

முன்னாள் ஜனாதிபதியின் ஊழியர் படை பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் நீதவான் லங்கா ஜயரத்ன மூலம் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை காப்புறுதி திணைக்களத்திற்கு சொந்தமான 4 பில்லியன் ரூபா பணத்தினை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் காமினி செனரத் மற்றும் குறித்த திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்களான பியதாச குடாபாலகே, நீல் ஹபுஹின்ன ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment