சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி இறுதி அஞ்சலியில் வைரமுத்து பாடல்

448 0

201608271249534553_former-singapore-president-SR-Nathan-Tribute_SECVPFசிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கில் எஸ்.ஆர்.நாதனுக்குப் பிடித்த கவிஞர் வைரமுத்துவின் பாடலான ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து…’ பாட்டு அரசு மரியாதையோடு ஒலிபரப்பப்பட்டது.

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. உலகத் தலைவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.நாதனுக்குப் பிடித்த கவிஞர் வைரமுத்துவின் பாடலான ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து…’ பாட்டு அரசு மரியாதையோடு ஒலிபரப்பப்பட்டது.

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஆர்.நாதன், தனக்கு எந்த ஊர் சொந்த ஊர் என்று தெரியாது. அதனால் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இதில் ஏதேனும் ஓர் ஊர் என் சொந்த ஊராக இருக்குமோ என்று உணர்ச்சி வசப்படுவதாகக் வைரமுத்துவிடம் சொல்லியிருக்கிறார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக கலாசார நிலையத்தில் நிகழ்ந்த இறுதி அஞ்சலியில் அவருக்குப் பிடித்த இந்தப் பாட்டு ஒலிபரப்பப்பட்ட போது சிங்கப்பூர் தமிழர்கள் சிலிர்த்து நின்றார்கள்.