நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே தேசிய அரசாங்கம் – ரணில்

411 0

1440133302-1774நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெலிமட பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த வரவு செலவுதிட்டத்தின் போது நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு விசேட வேலை திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.