கட்டுநாயக்கா விமான நிலைய பயண நேரத்தில் மாற்றம்!

360 0

1000-upload-iblock-a75-srilankan-airlines_comகட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையம் புதுப்பிக்கப்படவுள்ளதால், விமான சேவை அதன் பயண நேரத்தில் மாற்றம் செய்துள்ளது.

இதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 6ஆம் திகதிவரையான மூன்று மாதகாலப்பகுதிவரை விமானநிலையம் 8 மணிநேரம் மூடப்படவுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூர், சென்னை, திருச்சி, மாலே, கொச்சின் மற்றும் பெங்களூர் நோக்கி பயணிக்கும் விமானங்களின் பயண அமர்வுகளை ரத்துச்செய்யவுள்ளதாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அத்துடன், பீஜிங், ஷாங்காய், புதுடில்லி, லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணிக்கும் விமானங்களின் நேர அட்டவணையும் மாற்றம் செய்யப்படவுள்ளது.

மேலும், ரத்துச் செய்யப்படவுள்ள விமான சேவைகளை பிறிதொரு நேரத்தில் வழங்கவும் முடிவு செய்யப்படடுள்ளது.