வத்தளையில் தனி தமிழ் பாடசாலை – நாளை ஆரம்ப நிகழ்வு

356 0

JHONE-AMARATUNKA-5748547545வத்தளையில் தனித்தமிழ் பாடசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப பணிகள் நாளை, வத்தளை ஒலியமுல்லையில் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

காணி சுற்றுலாத்துறை மற்றும் கிருஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹட்டன் தொடரூந்து நிலையத்திற்கு சொந்தமான பழைய களஞ்சிய சாலையை அகற்றி, அந்த இடத்தில் புதிய மூன்று மாடி கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இதற்கான பணிகள் நாளை 1 மணி அளவில் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது வீதி அகலப்படுத்தல் மற்றும் வாகன தரிப்பிட வசதிகளும் செய்யப்படவுள்ளதாக, ஹட்டன் டிக்கோய அபிவிருத்தி சங்க தலைவர் அழகமுத்து நந்தகுமார் தெரிவித்தார்.