சிறீலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக சிங் சந்து

355 0

C_7101சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவராக சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.வை.கே.சின்ஹாவின் பதவிக்காலம் முடியும் நிலையில், புதிய இந்தியத் தூதுவராக சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவரான சிங் சந்து 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் கொன்சூலராக அவர் செயற்பட்டிருந்தார்.

2002ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளப்படட சமாதானப் பேச்சுவார்த்தையில் சிங் சந்து சிறீலங்காவில் பணியாற்றியிருந்தார்.

ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முன்னெடுத்த அவர், 1988 ஆம் இந்திய வெளிவிவகார சேவையில் இணைந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.