துருக்கி போலீஸ் தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு

374 0

201608261335525294_8-police-killed-in-southeast-Turkey-PKK-bomb-attack_SECVPFதுருக்கியில் நாட்டில் உள்ள போலீஸ் தலைமையகம் அருகே இன்று நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளனர். சுமார் 50 பேர் காயமடைந்தனர்.துருக்கியின் சிஸ்ரே பகுதியைச் சேர்ந்த போலீஸ் தலைமையகத்திற்கு வெளியே இன்று கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 8 போலீஸ் அதிகாரிகள் பலியாகினர். 45-க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து துருக்கி ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகளில் போலீஸ் தலைமையகத்தின் அருகாமையில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்து, சில கட்டிடங்கள் இன்னும் தீபற்றி எரிவது போல் காணப்படுகிறது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சிஸ்ரே பகுதியை சேர்ந்த முக்கிய சாலைகளை மூடப்பட்டுள்ளன.

காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.