ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் பகுதி மீட்பு

368 0

201608261512348118_Iraqi-forces-seize-strategic-town-near-Mosul-from-ISIS_SECVPFஈராக்கின் 2-வது பெரிய நகரமாக மொசூல் திகழ்கிறது. இந்த நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.
அங்கு தனிநாடு அமைத்து அரசாங்கம் நடத்தி வருகின்றனர். எனவே, அந்நகரை மீட்க ஈராக் ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிகிறது.

தற்போது மொசூல் நகரை மீட்க தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மொசூல் நகரின் வட பகுதியில் உள்ள குயாய்ரா ராணுவம் மீட்டது. மொசூல் பகுதியில் இந்நகரமே ஐ.எஸ்.தீவிரவாதிகளின் மிக பலம் வாய்ந்ததாகும்.

எனவே, மொசூல் பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகளை வென்று விட்டதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல்- அபாடி தெரிவித்துள்ளார்.