புவனேஸ்வரில் பயங்கரம்- மாணவரின் தாயாரை அடித்துக்கொன்ற ஆசிரியர் கைது

370 0

201608261722037348_private-tutor-arrested-for-killing-students-mother_SECVPFதனது குழந்தையின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக பேச சென்ற பெண்ணை ஆசிரியர் அடித்துக் கொன்ற சம்பவம் புவனேஸ்வரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  புவனேஸ்வர் நகர் பிஜேபி நகரைச் சேர்ந்த ஷீலா ஜெயா நேற்றிரவு தனது குழந்தையின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக அவனது டியுஷன் ஆசிரியரை சந்திக்க சென்றார்.
சென்ற இடத்தில் அவருக்கும் குழந்தையின் ஆசிரியரான ராஸ்மிரஞ்சன் சாஹூவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாற, ஜெயாவின் பின்மண்டையில் ராஸ்மிரஞ்சன் தாக்க அவர் மயங்கியிருக்கிறார்.ஜெயா மயங்கியதைத் தொடர்ந்து ராஸ்மிரஞ்சன் டியுஷன் சென்டரின் வெளியே நின்று கொண்டிருந்த அவரது டிரைவரை அழைத்து ஜெயா சுயநினைவு இழந்துவிட்டதாக தெரிவித்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த சந்திரசேகர்பூர் போலீசார் விரைந்து சென்று ஜெயாவை அருகிலிருந்த மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் ஜெயாவை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

டியூஷன் ஆசிரியர் ராஸ்மிரஞ்சனை இன்று கைது செய்த சந்திரசேகர்பூர் போலீசார் ஜெயாவின் மரணம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புவனேஸ்வர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.