டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

428 0

201608261711546664_CISF-jawan-posted-in-Delhi-Metro-commits-suicide_SECVPFடெல்லியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மெட்ரோ ரெயில் குழுமத்தின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்து வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான ஆல்பெஷ் ரத்வுட், மெவாலா மகாராஜ்புர் ரெயில் நிலையத்தில் இன்று காலை தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக ஆல்பெஷ் ரத்வுட் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தாலும், இந்த சம்பவம் பற்றி உரிய நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.