கர்ப்பிணிப்பெண் சடலமாக மீட்பு

327 0

625.0.560.320.160.600.053.800.668.160.90-13-300x165திருகோணமலை – சிங்கப்புரப்பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப்பெண் ஒருவரின் சடலத்தை இன்று மீட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட பெண் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்த சடத்தை மீட்டுள்ளதோடு, பெண்ணின் கணவரே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலைச்சம்பவத்தின் பின்னர் குறித்த பெண்ணின் கணவன் தலைமறைவாகி உள்ளார் என்றும், இவரைத் தேடும் பணி தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.