தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் தமிழர்களின் தலைவராக இருக்க முடியாது-மருத்துவர் சிவப்பிரகாசம் சிவமோகன்

333 0

dr-sivamokanதமிழ் மக்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச சிங்கள பேரினவாதிகளுக்கு தலைவராக இருப்பாரானால் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் தமிழர்களின் தலைவராக இருக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிவப்பிரகாசம் சிவமோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்திருந்தால் அதற்கான ஆதாரங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அனைத்துப் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.