உள்ளாட்சி தேர்தல் குறித்து விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார்- பிரேமலதா

345 0

201608251053335939_Vijayakanth-decided-civic-polls-says-premalatha_SECVPFஉள்ளாட்சி தேர்தல் குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார் என்று விஜயகாந்த் மனைவியும் தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மனைவியும் தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளருமான பிரேமலதா அளித்த பேட்டி வருமாறு:-அவதூறு வழக்குகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்ததை தே.மு.தி.க. வரவேற்கிறது.சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

சமீப காலங்களாக சட்டசபையில் நடந்து வரும் நிகழ்வுகள் ஆளுங்கட்சியின் பலவீனத்தை காட்டுகிறது.தமிழகத்தில் தற்போது இருக்கும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் அச்சுறுத்துவதாக இருக்கிறது. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டது.

இதற்கு ரெயில் கொள்ளை, கண்டெய்னரில் பணம் போன்றவை உதாரணம். ஜெயலலிதாவின் அறிவிப்புகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.தே.மு.தி.க. மிகவும் பலமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார்.

விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி உலக வெப்பமயமாகுதலை தடுக்க 2½ லட்சம் மரக்கன்று நடப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.