வடக்கில் பொலிஸ் நிலையம் திறப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

475 0

protestவடக்கில் இன்றையதினம் மூன்று பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படவிருந்த நிலையில், அது இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் மற்றும் வவுனியாவில் உள்ள நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் இன்று திறக்கப்படவிருந்த பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொலிஸ் நிலையம் திறப்பு விழாவானது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையங்கள் சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால் திறந்து வைக்கப்படவிருந்த நிலையில், இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கவில்லை என்றும் இதன்காரணமாகவே நேற்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக நிதி செலவில் அமைக்கப்பட்ட குறித்த பொலிஸ் நிலையங்கள் திறப்பு விழாவிற்காக நேற்றைய தினம் அலங்கரிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.