வற்வரி தொடர்பில் இறுதி முடிவு இன்னும் இல்லை – அமைச்சர் ராஜித

311 0

rajitha2-720x480வற்வரி அறவிடுதல் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வற்வரி சட்டமூலமானது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அரசு இது தொடர்பில் இன்னும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முதல் வற்வரி முடிவுகள் தொடர்பில் அறிவிப்பதா? இல்லையா? என தொடர்பில் இதுவரை முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.