இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்ய 516 மில்லியன் தேவை

307 0

Minister_Patali_Champika_Ranawaka31பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்வதற்கு 516.8 மில்லியன் நிதி தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பத்தரமுல்ல,பொல்துவ வீதி அபிவிருத்தி, அமதுவ நகரத்தின் வடிகான் அமைப்பு, மித்தெனிய நகரத்தின்  அபிவிருத்தி பணிகளுடன், வலஸ்முல்ல பஸ் நிறுத்துமிட கட்டுமாணப் பணிகளை நிறைவு செய்தல் என்பவற்றுக்கான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.