தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்படுவது ஜனாதிபதியின் சுயவிருப்பில் இல்லை – அமைச்சர் ஜோன்

317 0

JHONE-AMARATUNKA-5748547545ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் நீக்கப்பட்டமைக்கு காணம் ஜனாதிபதியின் சுயவிருப்பில் அல்லவென்று அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் மத்திய குழுவின் முடிவுக்கமையவே தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்படுவதாகவும், இதற்கும் ஜனாதிபதிக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தனிப்பட்ட காரணங்களை வைத்துக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுப்படுத்த வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஸவிடம் கோருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.