தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளது

305 0

Gayantha-Karunathilakeஅரசின் உத்தியோகப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதற்காக தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி அமைச்சரவையில் கிடைத்திருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகசந்திப்பில் தற்போது கலந்துக்கொண்ட பேர்தே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.