விச ஊசி விவகாரம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பரிசோதனை!

364 0

800x480_IMAGE52983553முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக சர்ச்சை எழும்பியுள்ள நிலையில், முன்னாள் போராளிகளுக்குப் பரிசோதன மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண சபையால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சரால் பரிசோதனை தொடர்பாக ஆராய்வதற்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் வைத்தியக் கலாநிதி சிவன்சுதன் தலைமையில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

இக்குழுவிடம் பதிவுசெய்த முதல் 5 போராளிகளுக்கு வைத்தியப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், வடக்கு மாகாண சபை முதன்முதலாக முன்னாள் போராளிகளின் விபரங்களை திரட்ட ஆரம்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.