ஐந்து மீனவர்கள் கைது!

252 0

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஐவரை இலங்கை கடற்படையினர் இன்று படகுடன் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மீன்துறை அலுவலக அனுமதியுடன் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 160 விசைப் படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஜோன்பீட்டர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களை கைப்பற்றிய அவர்கள், மீனவர்கள் இன்னாசி (வயது 40), ஜெமினி (42), கருப்பசாமி (47), பூமி 52), சுதாகர் (19) ஆகிய ஐந்து மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

Leave a comment