வவுனியா நீதிமன்ற சிறைக்குள் இளைஞன் மீது தாக்குதல்.!

239 0

வவுனியா நீதிமன்ற சிறைக்குள் வைத்து இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது,

வவுனியாவில் பிறமத பெண்ணொருவரை காதலித்து திருமணம் முடித்த இளைஞனை பெண் வீட்டாரின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் வவுனியாவில் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியிருந்தது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் மீதும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நேற்று நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில் இளைஞனையும் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் நால்வரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

நீதிமன்றின் நேரம் முடிந்த வேளையில், மன்றின் சிறைக்குள் வைத்து குறித்த இளைஞன் மீது பிறமத பெண்ணின் சகோதரர்களான இளைஞனை தாக்கியவர்கள் என கூறப்பட்டவர்கள் மீண்டும் கூண்டுக்குள் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, நீதிபதியிடம் குறித்த சம்பவம் தொடர்ப்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட அனைவரையும் எதிர்வரும் 07.11.2017 அன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர விட்டுள்ளார்.

எனினும் பாதிக்கப்பட்ட இளைஞனை சிறைச்சாலையூடாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment