வெலிக்கடை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

253 0

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 20 லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ள அதேவேளை காயமடைந்த ஒருவருக்கு ஐந்து லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்றைய தினம் நட்டஈட்டை வழங்கியுள்ளார்.

நட்டஈடு வழங்குவதற்கான பரிந்துரை செய்யப்பட்டவர்களில் சிலர் இதுவரையில் ஆவணங்களை உரிய முறையில் சமர்ப்பிக்கவில்லை எனவும், அவ்வாறு சமர்ப்பித்ததன் பின்னர் அவர்களுக்கும் நட்டஈடு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

Leave a comment