யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிபொருட்கள் கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.
13 வெடிக்குண்டுகள், 60 கைக்குண்டுகள், 06 மோட்டார் குண்டுகள் இவற்றில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றையதினம் சிறப்பு அதிரடிபடையினரால் மீட்கப்பட்ட வெடிகுண்டுகள் அரியாலைப்பகுதியில் பாதுகாப்பாக வெடிக்கவைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்