சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று பத்தரமுல்லை அபே கம வளாகத்தில் இடம்பெற்றது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் விழிப்புலனற்ற புனர்வாழ்வு நிதியத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.
விழிப்புலனற்றவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா அமைப்பின் அனுசரணையில் 5000 வெள்ளைப்பிரம்புகள் மற்றும் 5000 கண்ணாடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.