கடத்தப்பட்ட வர்த்தகரை விடுவிப்பதற்கு 2 கோடி கப்பம் கோரும் கடத்தல்காரர்கள்!

290 0

625.117.560.350.160.300.053.800.210.160.90-320கடத்தப்பட்ட வர்த்தகரை விடுதலை செய்யவேண்டுமானால் 2கோடி கப்பம் செலுத்தவேண்டுமென கடத்தல்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகமட் ஷகீம் (29) என்ற கோடீஸ்வர வர்த்தகரின் தந்தைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள் 2கோடி கப்பம் கோரியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் மகன் எம்மிடம் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரை உயிருடன் விடுவிக்கவேண்டுமாயின் 2கோடி கப்பம் செலுத்தவேண்டுமெனவும் கடத்தல்காரர்கள் கோரியிருந்ததாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட குறித்த வர்த்தகருடன் கொடுக்கல் வாங்கல்களை வைத்திருந்த 15 வர்த்தகர்களை இதுவரை காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் இணைக்கப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராவையும் காவல்துறையினர் பரிசோதனைக்குட்படுத்தி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.