நிலையவள்

பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதி வடக்கு முதல்வரைச் சந்தித்தார்(காணொளி)

Posted by - November 7, 2016
பிரிட்டனின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம் தொடர்பான அமைச்சரும் மற்றும் பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதியும், பெண்கள் விவகாரம் சார்ந்தவருமான பரனோஸ் ஏன்லி வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்தார். நேற்றையதினம் இலங்கைக்கு வருகைதந்த என்லி எதிர்வரும் புதன்கிழமை வரை…
மேலும்

சட்டவிரோதக் குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கக்கூடாது-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழ் மக்கள் மத்தியில் சட்டவிரோதமான குழுக்கள் எவையும் இயங்கக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன்போது இராணுவத்திற்கும் வாள்வெட்டுக்குழுக்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என ஊடகவியலாளர் கேள்ளி எழுப்பியபோது…
மேலும்

யாழில் ஆவாக்குழுவுடன் தொடர்பெனும் சந்தேகத்தில் 6 பேர் கைது

Posted by - November 6, 2016
இன்று யாழ்ப்பாணத்தில் ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை யாழப்பாணம் மருதனார்மடம் பகுதியில் வாள்வெட்டுக்குழு அல்லது ஆவா குழு என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர் பயங்கரவாதத் தடுப்பு பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திரகுமார் கபில் உசாந்தன்,…
மேலும்

சுலக்சன் வீட்டிற்கும் இரா.சம்பந்தன் சென்று அனுதாபம் தெரிவிப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொலிசாரினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யாழ்.பல்கலைக்கழக மாணவனாகிய பவுண்ராசா சுலக்சனின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
மேலும்

கஜன் வீட்டிற்குச் சென்ற இரா.சம்பந்தன் (காணொளி)

Posted by - November 6, 2016
யாழ்ப்பாணத்தில் கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரான நடராசா கஜனுடைய வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சென்று அனுதாபதம் தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன்  நடராசா கஜனின் இல்லத்திற்கு இன்று பிற்பகல்  எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் விஜயம் செய்து அவர்களின் குடும்ப…
மேலும்

யாழ் தென்மராட்சியில் தமிழரசுக்கட்சியின் கட்சியின் அலுவலகம் திறப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழரசுக்கட்சியின் கட்சியின் யாழ்ப்பாணம் தென்மராட்சி அலுவலகம் இன்று நுணாவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தனால் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. தென்மராட்சி தமிழரசுக்கட்சியின் அங்கத்தவர் க.அருந்தவபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் அரசியல்த் தலைமைகள்…
மேலும்

ஹட்டனில் கடையொன்றிற்குள் இருந்து சடலம் மீட்பு(காணொளி)

Posted by - November 6, 2016
நுவரெலியா ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து, ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் நகரில் சுமைதூக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரே இன்று மதியம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பொது மக்களின் தகவலுக்கமைய வர்த்தக நிலையத்தை சோதனையிட்டபோதே ஆணின் சடலமொன்று இருப்பதை பொலிஸார் கண்டுள்ளனர்.…
மேலும்

திருகோணமலையில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

Posted by - November 6, 2016
திருகோணமலை இலிங்கநகர் பகுதியில் நபர் ஒருவர் கைக்குண்டுடன்; கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் திருகோணமலை இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஜெயச்சந்திரன் கிஷாந்தன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதாக விசாரணையின் மூலம்…
மேலும்

சுலக்சனின் குடும்பத்திற்கு சம்பந்தன்  ஆறுதல் தெரிவித்தார்

Posted by - November 6, 2016
  பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்சனின் இல்லத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் விஜயம் செய்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும்

மக்கள் ஏற்காத எந்தத் தீர்வையும் நாம் ஏற்க மாட்டோம்-சம்பந்தன் தெரிவிப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
நாட்டில் இனப்பிரச்சினை விடயத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் தீர்வை ஒருபோதும் தாங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மக்களை சரியான தருணத்தில் சரியாக வழிநடத்த…
மேலும்