நிலையவள்

மட்டக்களப்பில் கிராமசேவகரை அவமதித்த தேரர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்-பொலிஸார்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தின்போது சம்பவ இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் சிசிர தெத்ததந்திரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக…
மேலும்

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூட்டமைப்பிற்கும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் வாக்குவாதம்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை நடாத்தப்பட்டது. இதன்போது வீதியில் டயர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிக்கமுற்பட்டவேளை, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்…
மேலும்

பௌத்த தேரருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை நடாத்தப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம்…
மேலும்

கிளிநொச்சியில் 7அடி கஞ்சா செடி மீட்பு(காணொளி)

Posted by - November 15, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முதலாக 7 அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட தேடுதலின்போது, குறித்த கஞ்சா செடியும், 25 லீட்டர்…
மேலும்

யேர்மனி , சின்டில்பிங்கன் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தல்

Posted by - November 14, 2016
யேர்மனி , சின்டில்பிங்கன் நகரில் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்திருந்த லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் கலையரசன், மேஜர் மிகுதன், லெப். மாவைக்குமரன், லெப். ஆட்சிவேல் மற்றும் மேஜர் செல்வம் ஆகிய மாவீரர்களின் 9ஆம் ஆண்டு நினைவு வணக்க…
மேலும்

வவுனியாவில் தீப்பற்றிய முச்சக்கரவண்டி(காணொளி)

Posted by - November 14, 2016
வவுனியா குளுமாட்டுச்சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. வவுனியா குளுமாட்டுசந்தியில் இன்று காலை 8 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று தீடிரென தீப்பற்றி எரிந்தது. வவுனியா நெளுக்குளத்திலிருந்து வவுனியா நகரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எரிபொருள் ஒழுக்கு காரணமாக குளுமாட்டுச்சந்தியில் இவ்வாறு தீப்பற்றிக்கொண்டதாகத்…
மேலும்

இராணிவத்தை-பம்பரகலை தொழிற்சாலை வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - November 14, 2016
நுவரெலியா இராணிவத்தை – பம்பரகலை தொழிற்சாலை வீதி புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குன்றும் குழியுமாக காணப்பட்ட மக்கள் பாவனைக்குதவாத இராணிவத்தை – பம்பரகலை தொழிற்சாலை முன்னாலிருந்து குட்டிமலை தோட்ட வழியாக மிடில்வத்தை வரையிலான 2 கிலோ மீற்றர் வீதியை புனரமைக்க…
மேலும்

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - November 14, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசெயலகம் முன்னால் நாளை காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த…
மேலும்

நாட்டை சிங்கள மயமாக்க பிக்குகள் மும்முரம்-தமிழர் விழிப்படைய வேண்டும்

Posted by - November 14, 2016
தமிழ் மக்களை அழித்துவிட்டு நாட்டை முழுச் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்காக மிக மோஷமான செயற்பாடுகளை பௌத்த பிக்குமார் சிலர் மேற்கொண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். இதனால் தமிழர்கள் அனைவரும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்…
மேலும்