நிலையவள்

வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இல்லை-கருணாசேன ஹெட்டியாராய்ச்சி

Posted by - November 20, 2016
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்ச்சி தெரிவித்தார். ஆவா குழு தொடர்பில் மக்கள் மத்தியில் சிலர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கின்…
மேலும்

யாழ் ஊர்காவற்றுறையில் வெளிநோயாளர் பிரிவு திறப்பு(காணொளி)

Posted by - November 19, 2016
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு திறப்பு விழா இன்று நடைபெற்றது.ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி வை.யதுநந்தனன் தலைமையில் நடைபெற்ற வைத்தியசாலை திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக எம்.ஜே.எவ் அறக்கட்டளை நிறுவன பணிப்பாளர்…
மேலும்

யாழ் வடமராட்சி வீதிகளில் மரங்கள் நாட்டப்பட்டன(காணொளி)

Posted by - November 19, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைப் பிரதேசத்தில் மரங்கள் இன்று நாட்டி வைக்கப்பட்டன.வல்லைப்பிரதேசத்தில் வீதிகளின் இரு மருங்கிலும் சூழலுக்குப் பொருத்தமான மருத மரங்கள் நாட்டப்பட்டன.வடக்கு மாகாண விவசாசய அமைச்சின் மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாசய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தலைமையில் மரம் நாட்டும்…
மேலும்

மாணவர்களின் கல்வி சீரான வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)

Posted by - November 19, 2016
மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு உயர்கல்விகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அறிவு சீரான வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களைக்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடியைப் பயிரிட்டவர் கைது

Posted by - November 19, 2016
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை பயிரிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் ஒருவர் கஞ்சா வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் வீட்டின் பின்புறத்தில் றப்பர் சாடியினுள் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா…
மேலும்

ஐ.எஸ் அமைப்பில் 32 முஸ்லிம்கள் என்ற விஜயதாச ராஜபக்சவின் கருத்திற்கு முஸ்லிம் பேரவை கடும் எதிர்ப்பு

Posted by - November 19, 2016
இலங்கையிலுள்ள 32 முஸ்லிம் இனத்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் நேற்று வெளியிட்ட கருத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் கருத்தாகவே இது அமைந்துள்ளதாக அந்த…
மேலும்

ஆனந்த சங்கரி மலையகத்திற்கு விஜயம்(படங்கள்)

Posted by - November 19, 2016
தமிழர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மலையகத்திற்கான விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளார்.மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் ஆலய மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் மலையத்திற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈடோஸ் இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் ஊடாக மஸ்கெலியாவில்…
மேலும்

இனவாதத்திற்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படும்-நீதியமைச்சர்

Posted by - November 19, 2016
இலங்கையில் இனவாதத்தையோ மத அடிப்படை வாதத்தையோ ஏற்படுத்துவோருக்கு எதிராக தராதரம் பாராது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேவைப்படின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் பிரயோகித்து இத்தகையோருக்கு எதிராக செயற்பட நேரிடும் எனவும்…
மேலும்

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை கட்டுப்படுத்துவதில் வெற்றி- அவுஸ்ரேலிய அரசாங்கம்

Posted by - November 19, 2016
அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் படகுகளின் வருகையை கட்டுப்படுத்துவதில்  வெற்றி பெற்றுள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்த  வெற்றியானது  கடல் எல்லை பாதுகாப்பு உறுதியாக செயற்படுவதை வெளிக்கொணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் புகலிடம் கோர முயற்சிப்பவர்களின்  எந்தவொரு படகும் இடை…
மேலும்

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது- பிரதமர்

Posted by - November 19, 2016
அரசியலமைப்பு பேரவை இன்று சனிக்கிழமை கூடவுள்ளது.பேரவையின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.இதன்போது பேரவையில் அங்கம் வகிக்கும் ஆறு உபகுழுக்கள் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை அரசியலமைப்பு நிர்ணய சபை கூடவுள்ளதுடன் அதில் பிரதமர், எதிர்கட்சி…
மேலும்