நிலையவள்

மட்டக்களப்பு ஏறாவூரில் மாணவனின் சடலம் மீட்பு

Posted by - November 28, 2016
மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை காணாமல்போன இரண்டாவது மாணவனது சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளது. காணாமல்போன இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டதுடன், மற்றைய மாணவனின் சடலம்…
மேலும்

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 28, 2016
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அடுத்த மாதம் 9ம் திகதி வரை சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில்…
மேலும்

கே.எம்.எல்.சரத்சந்திர பிணையில் விடுதலை

Posted by - November 28, 2016
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்குச் சொந்தமான ஜூப் வண்டியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இவர் அண்மையில் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில்,…
மேலும்

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது – ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 28, 2016
நாட்டின் தேவைக் கருதி மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தம் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்கொள்ளப்படும் எனவும், சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திருத்தத்துக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது…
மேலும்

தமிழ் மக்களின் விடிவுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை- சீனித்தம்பி யோகேஸ்வரன்

Posted by - November 28, 2016
தமிழ் மக்களின் விடிவுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மாத்திரமின்றி,45 முஸ்லிம்…
மேலும்

தமிழ் மக்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா ?

Posted by - November 28, 2016
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா என ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதன் மூலமும்மா,வீரர் தினைத்தை நினைவு கூருவதன் மூலமும் வடக்கின் தமிழ்…
மேலும்

பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி

Posted by - November 27, 2016
மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள மாவீர்ர் நினைவிடத்திற்கு முன்பாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் மாலை 6.5 ற்கு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மாவீர்ர் நினைவிடம் மஞ்சள் சிவப்பு கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு…
மேலும்

பெண்களின் பிரதிநிதித்துவம் சகல துறைகளிலும் அதிகரிக்கப்பட வேண்டும்-மஹிந்த தேஷப்பிரிய

Posted by - November 27, 2016
  பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மாத்திரமின்றி சகல துறைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மாத்திரமின்றி சகல துறைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக்கொண்டு உள்ளுராட்சி மன்றங்களில்…
மேலும்

வவுனியாவில் தேசிய மின்செயற்பாடு தொடர்பான நடமாடும் சேவை(காணொளி)

Posted by - November 27, 2016
மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சின் தேசிய மின் செயற்பாடு தொடர்பான நடமாடும் சேவையொன்று இன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. வவுனியா மாவட்டததினை நூறு வீதம் மின் வழங்கல் சேவைக்குள் உள்வாங்கும் பொருட்டு “இருள் நீங்கி நாடே ஒளியில்”…
மேலும்

திலீபனின் நினைவுத்துபியில், போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி (காணொளி)

Posted by - November 27, 2016
யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள சிதைக்கப்பட்ட திலீபனின் நினைவுத்துபியில், போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும்