யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குற்பட்ட நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் ஒன்றை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
தன்னை சுதந்திர கட்சியில் இருந்து விலக்கினால் , தன்னோடு எப்போதும் இருந்த மக்களோடு இணைவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேச விகாரையொன்றில் இடம்பெற்ற சமய வழிபாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனப்படும் நிதிமோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறை பிரிவினரால் அவர் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டார்.
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை குறித்த முக்கிய விபரங்களை உயர் காலவல்துறை அதிகாரியொருவர் வெளியிட உள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் பிரதிக் காவல்துறை அத்தியட்சகர் டி.ஆர்.எல். ரணவீரவே இவ்வாறு தகவல்களை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் உள்ளிட்ட வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் சிறீலங்கா விஜயம் செய்ய உள்ளனர்.எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களில் இவ்வாறு பல முக்கிய வெளிநாட்டு ராஜதந்திரிகள் சிறீலங்கா விஜயம் செய்ய உள்ளனர்.
பாராளுமன்ற உறப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜராகியுள்ளனர்.
வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய தேச அமைப்பானது ஆக்கிரமித்து தனி நாடாக அறிவித்து செயல்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து ஐ.எஸ் பிடியில் இருந்த தங்கள் நாட்டு பகுதிகளை மீட்க ஈராக் மற்றும் சிரியா அரசுகள் பல்வேறு…