ஒருதுளி எரிபொருள் கூட செலவில்லாமல் வெறும் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கக்கூடிய ஆற்றலை கொண்டே 71 மணி நேரம் பறந்த சோலார் இம்பல்ஸ் விமானம் ஸ்பெயினில் தரையிறங்கியது.
அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்களை மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளதால் அங்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகசீன் சிறைச்சாலையில் 600பேரையே தடுத்து வைத்திருக்கமுடியும் என்ற போதிலும் அங்கே 1114பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் டப்ளினில் கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்ற கராத்தே…
கடந்த ஜெனீவா அமர்வில் சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முன்னேற்றம் காணப்படாத தீர்மானங்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெளிவாகக் குறிப்பிடவேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன.
இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர், தி கார்டியன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் அமைந்துள்ள காவல்துறை காவலரணை காவல்துறை நிலையமாக மாற்றுவதற்கு காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ கடந்த புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தமிழில் உரையாற்றினார். ஆட்பதிவு தொடர்பான திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் தமிழில் உரையாற்றியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதிகள் தொடர்பான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்காததால் கொழும்பிலுள்ள ஐநா தூதரகத்தில் இன்று முறையிடப்போவதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் மகஜர் ஒன்று கையளிக்க ப்படவுள்ளது. அரசியல் கைதிகளுக்கான தேசிய இயக்கம் இந்த மகஜரை இன்று கையளிக்கவுள்ளதாக இதன் இணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.