தென்னவள்

அரியநேத்திரனுக்கு கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பாணை

Posted by - June 24, 2016
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (CID) விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

நாளை வலி.வடக்கில் மேலும் 201 ஏக்கர் காணிகள் மட்டும் விடுவிப்பு

Posted by - June 24, 2016
யாழ்ப்பாணம் வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது காணிகளில் மேலும் 201 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை 25ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெறும் நிகழ்வில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இக்…
மேலும்

சோமவன்ச அமரசிங்கவின் இடத்திற்கு ஜயந்த விஜேசிங்க

Posted by - June 24, 2016
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் இடத்திற்கு மக்கள் தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஜயந்த விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கம்மன்பிலவுக்கு எதிராக சாட்சியமளிக்க அவுஸ்திரேலிய பிரஜை தயார்

Posted by - June 24, 2016
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு வந்து சிறையில் உள்ளஉதய கம்மன்பிலவுக்கு எதிராக சாட்சியம் அளிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய வர்த்தகரானபிரையன் ப்ரடிக் தெரிவித்துள்ளார்.
மேலும்

கட்சிக்கு துரோகம் இழைத்த எவரும் வெற்றியீட்டியதில்லை

Posted by - June 24, 2016
கட்சிக்கு  துரோகம் இழைத்த எவரும் வெற்றியீட்டியதில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக  தனித்தும் குழுக்களாகவும் பல தடவைகள் கிளர்ச்சிகள் செய்யப்பட்ட போதிலும் அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக போராட்டம்

Posted by - June 24, 2016
மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக இன்றைய தினம் பாரியளவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினரால் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

மஹிந்தவிற்கு மிகவும் நெருக்கமான இராணுவ உயர் அதிகாரியும் பாதுகாப்பிலிருந்து நீக்கம்

Posted by - June 24, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வந்த உயர் பாதுகாப்பு அதிகாரியும், பாதுகாப்புப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி மஹிந்த ராபஜக்ஸவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு முற்றிலுமாக அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்த ஒராண்டு காலம் தேவை

Posted by - June 24, 2016
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு காலம் தேவைப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஓராண்டு கால அவகாசம் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

ஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் காலமானார்

Posted by - June 24, 2016
ஆவணஞானி குரும்பசிட்டி  இரா. கனகரத்தினம் அவர்கள்  22-06- 2016 அன்று கண்டி நகரில் காலமானார். தற்போது உலகின் பல நாடுகளிலும் கிளைகளை அமைத்து தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழ்க் கல்வி  ஆகிய துறைகளில் உழைத்து  வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தில் ஸ்தாபகர்களில்…
மேலும்

அரச படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தினர் -சிறிதரன்

Posted by - June 24, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினர், சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட த கார்டியன் ஊடகம் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தது.
மேலும்