அதிநவீன தொழில்நுட்பத்துடன் எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காமல் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் ‘செங்டு J-20’ ரக போர் விமானத்தை சீனா இன்று அறிமுகப்படுத்தியது.
பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.
யுத்தத்தின் போது அவையவங்களை இழந்துள்ள ஓய்வுபெற்ற படைச் சிப்பாய்கள் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செலயகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமக்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போரின் போது அவையவங்களை இழந்து நிர்க்கதியாக இருக்கும் தமக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி…
போர்க் காலத்தில் கைதானவர்கள் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனதாக பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டுவந்த மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ராணுவ முகாமுக்கு பின்புறமாகவுள்ள காணியில் நடைபெற்ற அகழ்வு பணியின் போது, மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்டதையடுத்து அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர். மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோரிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.