கோப் குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை ஐக்கிய தேசியக் கட்சி அமுல்படுத்தும் என அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். கேகாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வன்முறைகளில் ஈடுபடுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்களினால் எதனையும் வெற்றிகொள்ள முடியாது எனவும்…
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் மற்றும் சாவி கோர்ப்பான்கள் வைத்திருந்த பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார். ஜெர்மன் குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட குறித்த பெண்ணை அண்மையில் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
லெபனான் அதிபராக மைக்கேல் ஆவுன் அந்நாட்டு பாராளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அதிபரை தேர்வு செய்வதற்கான 19 மாத கால இழுபறி முடிவுக்கு வந்தது.
வங்காள தேசத்தில் 15 இந்து கோவில்கள் இடித்து அழிக்கப்பட்டன. இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசம் மத சார்பற்ற ஐனநாயக நாடாக உள்ளது. இங்கு இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு…
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்கி சென்றதாக கைதான இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.சேலம் மாவட்டம் நீர்முள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 30). லாரி டிரைவர். இவரது மனைவி இந்து (வயது 24). இந்த…
காவிரி பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து சென்னை கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்து உள்ளது.