பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜினாமா செய்ய இணங்கவில்லை என்றால்,பிரதமரை பணிநீக்கம் செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பிற்குப் பின்னர் பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பினர்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சட்டவாளர்களும் அச்சமடைகின்றனர். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச…
நாட்டில் சகல காவல்துறை நிலையங்களிலும் தமிழ் மொழியில் விசாரணை செய்வதற்கும் தமிழ் மொழியில் முறைப்பாட்டினைப் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதியளித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் நடுத்தர வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் மார்டின் பின்வில், ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.