உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் கருணாநிதியை பார்ப்பதற்காக முக அழகிரி தனது மனைவி காந்தியுடன் சென்றதால் சிறிது நேரம் கோபாலபுர இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி தஞ்சாவூரில் அதிமுக தொண்டர் ரவீந்திரன் என்பவர் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறுதிப் போரையும் அதில் அரசாங்கப் படைகள் பெற்றுக் கொண்ட வெற்றியையும் பாடசாலைப் பாடங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கின்றார். வரலாறு எப்போதுமே வெற்றியாளர்களின் பக்கத்திலிருந்து எழுதப்பட்டு வந்திருக்கின்றது.
தமிழகத்துக்கும், மன்னார் வளைகுடாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இந்திய கடலோர காவற்படையினர் பாதுகாப்புகளை அதிகரித்துள்ளனர். த ஹிந்து நாளிதழ் இதனைத் தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மகள் சமூக வலைதளங்கள் ஊடாக வெளியிடப்படும் தகவல்கள் தம்மீது அழுத்தங்களை பிரயோகிப்பதாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளை முன்னாள் ஜனாதிபதி இன்றைய தினம் சந்தித்துள்ளார்.
சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்னவின் குற்றச்சாட்டு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்குமாறு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா மேன்முறையீடு செய்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில், துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.