ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை.அதனால் அத்திட்டம் தோல்வியடைந்தது.
மீண்டும் இலங்கையை குடும்ப ஆட்சிக்குள் கொண்டுசெல்ல இனி ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருந்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளாக இருந்தாலும் அல்லது சிங்கள இனவாதக் குழுக்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு எண்ணம் கொண்ட நபர்களே என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை கிலியில் ஆழ்த்தியுள்ள ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்ய கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் மூவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில், ஆவா குழு என்ற பெயரில் செயற்படும் சட்டவிரோத ஆயுதக் குழு எவ்வாறு சுதந்திரமாகச் செயற்படமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்?
சிறீலங்கா இராணுவத்தினர் வடக்கு மாகாணத்தில் நடாத்திவரும் சிகையலங்கரிப்பு நிலையங்களை மூடுமாறு கோரிக்கை விடுத்துள்ள சிகையலங்கரிப்பாளர்கள் அதற்கு ஒரு மாதகால அவகாசமும் வழங்கியுள்ளனர்.
புதிய கட்சியில் தலைமைப் பொறுப்பேற்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.