அமெரிக்காவின் அதிபராக ரொனால்ட் ட்ரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளபோதிலும், சிறீலங்கா தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லையென சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
விச ஊசி விவகாரம் தொடர்பில் பத்தாவது வாரமாக நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், இதுவரை 193 முன்னாள் போராளிகள் மட்டுமே பங்கேற்றுள்ளமையானது மருத்துவ பரிசோதனையில் ஆர்வம் காட்டாத தன்மையே காட்டுகிறது என வடமாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பெரும்பான்மையின மக்கள் ரொனால்ட் ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியதைப்போல், சிறீலங்காவின் பெரும்பான்மையின சிங்களவர்கள் அதனை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் இழைத்தவர்கள் எனக் குற்றம்சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட கரையோர மாவட்ட மக்களின் ஜீவனோபாய விருத்திக்கு 1200 மில்லியன் ஒதுக்கீடு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் உயர்தரப் மாணவர்களுக்கு 28 ஆயிரம் உயர்தர கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மடிக் கணனி வழங்கப்படும்.
தேசிய மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஆளுங்கட்சியில் உள்ள சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,…
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதியான ராஜித சேனாரட்ன மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். (அரச தலைவர்கள் மரபு ரீதியாக வாழ்த்துவது வேறும் விடயம்) இனி அமெரிக்கா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என ராஜித…