நியூசிலாந்து நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக அணைக்கட்டின் தடுப்பு சுவர் உடைந்து ஊருக்குள் ஆற்றுநீர் பாய தொடங்கியதால் அப்பகுதியில் வாழும் மக்களை அவசரமாக வசிப்பிடங்களைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், எனது சம்பளமாக ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே வாங்குவேன். விடுமுறை எடுக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
ரூ.500, ரூ.1,000 பயன்பாட்டை தொடர வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 16-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நெல்லை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பணத்தட்டுப்பாடு காரணமாக திருமண மண்டபங்களில் கூட்டம் குறைந்துள்ள நிலையில், ‘பணம் செலுத்தும்’ கருவி மூலம் கோவில்பட்டியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் மொய் பணம் வசூலித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பதுக்கல்காரர்களுக்கு பாதிப்பில்லை, நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
பெருந்தோட்ட மக்களுக்கான உரிமைகளை கெஞ்சிக் கேட்கவில்லை, தட்டியே கேட்கப்படுகின்றது. இதனால் 2017 வரவு செலவு திட்டத்தில் 25000 வீடுகள் மேலதிகமாக காணி உரித்துடன் கிடைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்…