மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் தனது மனைவி 10 வருடங்களாக ஜனாதிபதி செயலகத்தில் ஆலோசகராக கடமையாற்றினார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து இன்று 21 அகதிகள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐநாவுக்கான அகதிகளுக்கான ஆணையகத்தினால் இன்று தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறீலங்கா புலனாய்வுப் படைப்பிரிவின் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார்.
வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனம் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.