அமெரிக்காவில் ‘ஜியோபார்டி டீன் டோர்னமென்ட்’ என்ற பெயரில் டெலிவிஷனில் ஆண்டுதோறும் நடத்துகிற வினாடி வினா போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் சுமார் ரூ.67 லட்சம் வென்றார்.
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் பற்றியோ அவ்வாறான அமைப்புகள் இலங்கையில் மத போதனைகளை நடத்துவது குறித்தோ எந்த தகவல்களும் வெளியாகவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என ஞானசார தேரர் தெரிவித்தார்.இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் காவல்துறையினர் வசமுள்ள அசோகா விடுதியை விடுவிக்குமாறு விரைவில் காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன் பேச்சு நடாத்தவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.