பிரித்தானியாவில் படுகாயமடைந்து கோமாவில் உள்ள முன்னாள் ராணுவ வீரரை கருணை கொலைக்கு உட்படுத்த வேண்டுமென கேட்டு அவரது மனைவி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
கதிர்காமம் புனித பூமியில் யாசகத்தில் ஈடுபட்ட 23 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று கைது செய்யப்பட்டவர்களில் 10 சிறுமிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது கட்சியில் குடும்ப ஆட்சி முறைமை கிடையாது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.வலப்பன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
வரும் ஒரு சில மாதங்களிற்குள் ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு முன்வைக்கப்படவுள்ளதாகவும் அதனை எதிர்க்கும் அமைப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திகழ்வதால் தமது கட்சியை முடக்கும் திரைமறைவுச் சதிகள் நடைபெற்றுவருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல்’ நிகழ்வு இன்று(27) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.5 மணியளவில் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது.