கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பு முயற்சியாளர் கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவரால் விதை நடும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அளுத்கமவில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடுகின்ற அனைத்து தனியார் பஸ்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மறைந்த பண்டித் டப்ளியூ.டீ.அமரதேவவின் இறுதிக் கிரியைகளின் போது, ஊடகவியலாளர் எனக் கூறிக் கொண்டு சந்தேகத்திற்கிடமான முறையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அருகில் நின்று கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் வாவிப்பகுதியில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை இன்று வியாக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து பெருமளவு சட்டவிரோத வலைகளையும் மீட்டுள்ளனர்.
இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்காக 500 தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை விரைவில் முன்னெடுக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.