வடக்கில் பொருத்துவீடுகளை திணிப்பதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை, இந்தியாவின் முன்னாள் சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் வீட்டில் மர்மமான முறையில் இறந்த லஹிரு ஜனித் திஸாநாயக்க என்ற இளைஞனின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1275 மில்லியன் இழப்பீடு ஒதுக்கிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
புதிய அரசியலமைப்புக் குறித்து கருத்து வாக்கெடுப்பு நடாத்துவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியான ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சீன முதலீட்டாளர் குழுவொன்று சிறீலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு, புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.தெற்கு- தெற்கு ஒத்துழைப்புக்கான சீன பேரவையின் பிரதி பணிப்பாளர் ஷியாவோ லிம்மின் ஒருங்கிணைப்பில், 12 சீன முதலீட்டாளர்கள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
மரணப்படுக்கையில் இருந்த 14 வயது சிறுமி, 100 ஆண்டுக்குப் பிறகும் உயிர்பிழைக்க வாய்ப்பு உள்ளதாக கூறியதையடுத்து அவர் விரும்பியபடி உடலை உறைநிலையில் பதப்படுத்தி வைக்க லண்டன் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.