உண்மையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடராஜா ரவிராஜின் உருவச்சிலை திறப்புவிழா நேற்றுமாலை சாவகச்சேரி பொன் விழா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக…
ஜனநாயகத்தின் ஊடக ஆட்சிபீடத்தை கைப்பற்ற முடியாதவர்கள் பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கே இராணுவ சூழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. எனினும், இராணுவச் சதியின் ஊடாக, இலங்கையில் யாருக்கும் ஆட்சிபீடம் ஏறமுடியாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தனக்கு உத்தரவாதம் அளித்துள்ளார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
சிவனொளிபாத மலை பருவகாலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிவனொளிபாத மலைக்கு யாத்திரகைளை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், பொலித்தின் பைகள் மற்றும் பிளாஸ்திக் தண்ணீர் போத்தல்களை கொண்டுச் செல்வதை தவிர்க்குமாறு, நுவரெலியா மாவட்ட…
வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை தொடர்பில் கண்டறிவதற்காக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அடுத்த வரும் ஜனவரி மாதக் காலப்பகுதியில், அந்நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11 பேரையும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் இராமலிங்கம் சபேசன், ஞாயிற்றுக்கிழமை (20) உத்தரவிட்டார்.