தமிழ் மக்களின் விடியலுக்காக தம்முயிரை ஈகஞ்செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாளைக் குழப்புவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இராணுவத்தினரின் மாபெரும் களியாட்ட நிகழ்வு திடீரென ரத்துத் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு நீண்டகாலம் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
வடக்குக் கிழக்கு மக்களுக்கு இரும்பினாலான பொருத்து வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்குப் பதிலாக, அங்கே நிலவும் உஷ்ணமான காலநிலைக்கு ‘போறணை’ அமைத்துக்கொடுப்பது சிறந்தது என முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போலி ஆவணங்களை சமர்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உடல் நிலை தொடர்பாக கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையொன்றை கோருவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெரனியாகல பிரதேசசபை முன்னாள் தலைவர் அத்தகொட்டா உட்பட குற்றம் நிரூபிக்கப்பட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.