இந்திய கடற்படை கப்பல் ஒன்று கொழும்பில்

528280 0

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இன்று காலை கொழும்பை வந்தடைந்தது.

இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணிகளை விரிவுப்படும் நோக்கிலேயே குறித்த கப்பல் இன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.

இந்த கப்பலில் கடற்படை அதிகாரிகள் 10 பேர் மற்றும் 98 கடற்படையினர் ஆகியோர் வருகைத்தந்துள்ளனர்.

குறித்த கப்பலை கடற்படையினர் வரவேற்றுள்ளனர்.